Showing posts with label செம்மொழி விருதாளர்கள். Show all posts
Showing posts with label செம்மொழி விருதாளர்கள். Show all posts

Saturday, May 06, 2017

செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙீ




செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙீ 

இளம் அறிஞர் விருது – 2015-16


முனைவர் மு. வனிதா
  முனைவர் மு. வனிதா 1979இல் வேலூர் மாவட்டம் வீரமுட்டிப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர். திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், திராவிடப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இலக்கியம்-இலக்கணத்தில் புலமை பெற்றவர். திராவிடப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுத்திட்ட உதவியாளராக ஓராண்டு பணிபுரிந்துள்ளார். தற்போது தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மூன்று நூல்களையும், முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களின் செல்வாக்கு நவீன இலக்கியங்களில் எவ்வாறு தொடர்ந்து வந்துள்ளது என்பதை ஆய்வு செய்து வருகிறார். திருவள்ளுவர் தங்கப் பதக்கம், ஆய்வுலகச் சிற்பி விருது, இலக்கிய ஆளுமை விருது உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெற்றவர். நற்றிணையின் உள்ளடக்கவியல் அமைவுக் கூறுகள் என்னும் இவரது ஆராய்ச்சி நூல் சங்க இலக்கிய ஆய்வுக்கு மிகச் சிறந்த பங்களிப்பு ஆகும்.

முனைவர் வெ. பிரகாசு
  முனைவர் வெ. பிரகாசு 1984இல் புதுக்கோட்டையில் பிறந்தவர். சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களும் பெற்றுள்ளார். தற்போது பாண்டிச்சேரி ஃபிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் முனைவர் பட்ட மேலாய்வு நிகழ்த்தி வருகிறார். கற்பகம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பழந்தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் புலமை பெற்றவர். மூலப்பாடத் திறனாய்வு அடிப்படையில் புறநானூற்றை ஆய்வு செய்துள்ளார். பாரிஸ், சர்பான் நூவல் பல்கலைக்கழகத்தில் புறநானூற்றின் செம்பதிப்புச் சிக்கல்கள் பற்றிய சொற்பொழிவு நடத்தியமை, லெய்டன் பல்கலைக்கழகம், ஹம்பர்க் பல்கலைக்கழகங்களில் செவ்வியல் தமிழின் நுட்பங்கள், சிறப்புகள் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் வழங்கியுள்ளமை சிறபிற்குரியவையாகும். பாட ஆய்வியல் கையேடு, திணை: உணர்வும், பொருளும் ஆகிய ஆராய்ச்சி நூல்கள் இவரது சங்க இலக்கிய ஆய்வுப் புலமையைப் புலப்படுத்தும்.

முனைவர் சிரீ. பிரேம்குமார்
 முனைவர் சிரீ. பிரேம்குமார் 1977இல் காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர். சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களும் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் திட்டப் பணியாளராக இரண்டு ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். தற்போது சென்னை, தூய தாமசு கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஐந்து நூல்களை வெளியிட்டுள்ளார். இருபத்தைந்து ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழ் ஆர்வலர் விருதினைப் பெற்றுள்ளார். சங்க இலக்கியம்: வரையறையும் ஆய்வுப் போக்கும், செவ்விலக்கிய ஆய்வுகள்: தொகுப்பு நூல் ஆகிய நூல்கள் சங்க இலக்கிய ஆய்வுக்கு இவரது பங்களிப்புகள் ஆகும்.

முனைவர் க. பாலாசி
  முனைவர் . பாலாசி 1981இல் சிவகங்கை மாவட்டம் மாவிடுதிக்கோட்டை என்னும் ஊரில் பிறந்தவர். அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களையும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் பட்டமும் பெற்றுள்ளார். பல்வேறு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக எட்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தற்போது சிரீகிருட்டிணா ஆதித்தியா கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். நான்கு நூல்களும், பதினைந்து ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சென்னை, பாரதியார் மாணவர் மன்றத்தின் இளந்தமிழறிஞர் விருதும், திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவ சித்தாந்த இரத்தினம் விருதும் இவர் பெற்றிருப்பது சிறப்பாகும். நற்றிணைப் பதிப்பு வரலாறு, நற்றிணை உரைவேறுபாட்டுப் பதிப்பு, பெருங்கற்காலப் பண்பாடு (தொல்லியல்) ஆகிய நூல்கள் சங்க இலக்கிய ஆய்வுக்கு இவரது பங்களிப்புகள் ஆகும்.

முனைவர் மு. முனீசு மூர்த்தி
  முனைவர் மு. முனீசு மூர்த்தி 1983இல் இராமநாதபுரம் மாவட்டம் வடவயல் என்னும் ஊரில் பிறந்தவர். காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் இலக்கிய இளங்கலை (பி.லிட்.), பட்டமும், அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் பட்டமும் பெற்றுள்ளார். அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் பல்கலைக்கழக நல்கைக் குழுப் பெருந்திட்ட ஆய்வு உதவியாளராக இரண்டு ஆண்டுகளும், இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக ஓராண்டும், கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக ஓராண்டும் பணிபுரிந்துள்ளார். தற்போது திருச்சி பாதிரியார் ஈபர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஆறு நூல்கள் எழுதியுள்ளார்; எட்டு நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். சென்னைக் கம்பன் கழகத்தின் ‘தமிழ்நிதி’ விருதினைப் பெற்றுள்ளார். கலித்தொகை: பதிப்பு வரலாறு, உரையாசிரியர்களின் செவ்வியல் நோக்கு, கலித்தொகைஉரை வேறுபாட்டுப் பதிப்பு, செவ்விலக்கிய மீட்பர்: சி.வை. தாமோதரம் பிள்ளை, தென்னக நூலகங்கள்ஆவணம் ஆகிய நூல்கள் சங்க இலக்கிய ஆய்வுக்கு இவரது பங்களிப்புகள் ஆகும்.

Friday, May 05, 2017

செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙி




செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙி

இளம் அறிஞர்கள் – 2014-2015


முனைவர் . சதீசு
  முனைவர் . சதீசு 1982 இல் விழுப்புரம் மாவட்டம் கண்ணியம் என்னும் ஊரில் பிறந்தவர். மயிலம், சிரீமத்து சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரியில் இலக்கிய இளங்கலை (பி.லிட்.), சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். சுவடியியலிலும் பதிப்பியலிலும் பட்டயச் சான்றிதழ் பெற்றிருப்பது சிறப்பாகும். சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகிய பழந்தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் ஆழ்ந்த புலமை உடையவர். மொழியியல் மற்றும் சுவடியியலிலும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
  சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக நான்கு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தற்போது விழுப்புரம் சிரீமத்து சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஐந்து நூல்களை எழுதியுள்ளார். இலக்கணம் குறித்த இவருடைய நூல்களும், கட்டுரைகளும் புதிய அணுகுமுறைகளைக் கையாள்பவை. தமிழ் யாப்பியல் மரபுகள்: புறநானூற்று யாப்பியல், யாப்பருங்கல விருத்தியுரைகாரரின் தொல்காப்பிய உரை, தொல்காப்பியம்சங்க இலக்கியம்: யாப்பியல் சிந்தனைகள் எனும் மூன்று நூல்களும் இவரது தமிழ் ஆய்விற்கும், இலக்கிய இலக்கணப் புலமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

 

முனைவர் செ. முத்துச்செல்வன்
  முனைவர் செ. முத்துச்செல்வன் 1977 இல் சேலம் மாவட்டம் நாவக்குறிச்சி என்னும் ஊரில் பிறந்தவர். ஆத்தூர், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், திருச்சி, பாதிரியார் ஈபர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முனைவர் பட்ட மேலாய்வும் புரிந்துள்ளார். சங்க இலக்கியம், ஓலைச்சுவடியியல், தமிழ்க் கணிணி, சொல்லடைவு, தொடரடைவு ஆகிய துறைகளில் புலமை பெற்றவர். சென்னையில் பல்வேறு கல்லூரிகளில் ஒன்பது ஆண்டுகள் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். சென்னை, தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் திட்ட ஆய்வு வளமையராக ஓராண்டு பணிபுரிந்துள்ளார். தற்போது சென்னை மீனம்பாக்கம் அகர்சந்து மான்மல் சமணர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
 அகநானூற்றுக்குச் சொல், பொருள், இலக்கணக் குறிப்புடனான தொடரடைவு, இக்காலத் தமிழ் ஆய்வாளர்களுக்குச் சுவடியியல் பதிப்பு வரலாற்றைப் புலப்படுத்துதல், செம்மொழித் தமிழ் தொடர்பான உலக அறிஞர்களின் நோக்கில் தமிழை ஆவணப்படுத்துதல் முதலிய பணிகளில் ஈடுபட்டுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கட்டுரைகள் வழங்கியுள்ளார். ஆறு நூல்கள் எழுதியுள்ளார். அகநானூறுதொடரடைவு (இரண்டு தொகுதிகள்), ஓலைச்சுவடிப் பதிப்பு வரலாறு, சுவடி வரலாற்றுச் சோலை ஆகிய இவரது மூன்று நூல்களும் சங்க இலக்கியம், சுவடியியல் சார்ந்த சிறப்பான பங்களிப்புகளாகும். அகநானூறு தொடரடைவு,  ஓலைச்சுவடிப் பதிப்பு வரலாறுஆத்தூர் வட்டார விடுகதைகள் ஆகிய நூல்கள் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் நிதி உதவியுடன் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 
 முனைவர் . திருஞானசம்பந்தம்
  முனைவர் . திருஞானசம்பந்தம் 1983இல் விழுப்புரம் மாவட்டம் இராயர்பாளையம் என்னும் ஊரில் பிறந்தவர். மயிலம் தமிழ்க் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மேலாய்வு புரிந்து வருகிறார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதித் திருத்தப் பணித் திட்டத்தில் சொல் தொகுப்பாளராக ஓராண்டு பணிபுரிந்துள்ளார். சென்னை, வேல்சு பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக நான்கு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். ஏழு நூல்களும், இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.  மொழியியல் ஆய்வு வரலாறு: பேரா. . அகத்தியலிங்கம் பங்களிப்புகள், பதினெண்கீழ்க்கணக்கின் யாப்பமைதி, பதினெண் கீழ்க்கணக்கு வடிவமும் வரலாறும், பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பும் வாசிப்பும்தமிழியல் ஆய்வு வரலாறு:    பேரா. (இ). மணிகண்டன்ஆசிரியம்ஆய்வுகள்உரைப்பதிவுகள் எனும் இவரின் ஐந்து நூல்களும் பாராட்டுக்குரியவை.
   செவ்விலக்கியப் பனுவல்கள் குறித்து இவரால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளும் தொல்காப்பியத்தில் காணப்படும் நுண்ணிய பகுதிகளான இழைபு, யாப்பு, நோக்கு, பயன் ஆகியவையும் புதிய அணுகுமுறையில் அமைந்துள்ள ஆய்வுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

 
  முனைவர் மா. வசந்தகுமாரி
முனைவர் மா. வசந்தகுமாரி 1976இல் சேலம் மாவட்டம் தாரமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். இலக்கணத்தில் புலமை உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதித் திருத்தப் பணித் திட்டத்தில் ஓராண்டு சொல் தொகுப்பாளராகவும், சென்னை, வேல்சு பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது திருச்செங்கோடு விவேகானந்தா கலை, அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். செவ்வியல் தமிழ்ப் பனுவல்களைப் புதுமை நோக்கில் விளக்கும் இரண்டு நூல்களையும், மூதறிஞர் பற்றிய ஒரு நூலும் எழுதியுள்ளார். இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சங்க இலக்கியத்தில் கருத்தாடல், தொல்காப்பியக் கருத்தாடல் ஆகிய இரு நூல்களும் இவரது இலக்கிய, இலக்கணப் புலமையை வெளிப்படுத்தும் நூல்களாகும்.

முனைவர் கோ. சதீசு
  முனைவர் கோ. சதீசு 1976இல் சீர்காழி என்னும் ஊரில் பிறந்தவர். பூம்புகார் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் பட்டமும் பெற்றிருப்பது சிறப்பாகும்.  இலக்கணத்திலும், மொழியியலிலும் புலமை பெற்றவர். மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் நான்கு ஆண்டுகள் உதவிப் பேராசிரியராகவும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் ஆய்வு வளமையராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பல்வேறு தேசியப் பயிலரங்குகளில் கலந்து கொண்டு ஆய்வு மாணவர்களுக்கு இலக்கணப் பயிற்சி அளித்துள்ளார். சங்கத் தமிழ்: மொழியியல் பார்வைகள், பண்டைத் தமிழ்ப் பனுவல்கள் ஆகிய நூல்கள் சங்க இலக்கிய ஆய்வுக்கு இவரது பங்களிப்புகள் ஆகும்.

Thursday, May 04, 2017

செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙா




செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள்  (2013 -14, 2014-15, 2015 – 16)  –  ஙா

  தமிழியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள 30-40 அகவைக்குட்பட்ட இளம் அறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மதிப்புச் சான்றிதழும், நினைவுப் பரிசும் உ.ரூ.1 இலக்கம் பரிசுத்தொகையும் அடங்கிய இளம் அறிஞருக்கான விருது ஒவ்வோராண்டும் ஐவர்க்கு வழங்கப்படுகின்றது.

இளம் ஆய்வறிஞர் விருது – 2013-14

 
முனைவர் உல. பாலசுப்பிரமணியன்

  முனைவர் உல. பாலசுப்பிரமணியன் 1975இல் தஞ்சாவூர் மாவட்டம், ஐம்பதுமேல் நகரம் என்னும் ஊரில் பிறந்தவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இலக்கிய இளங்கலை(பி.லிட்.), முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். முதுகலை இதழியல், முதுகலை மொழியியல் பட்டங்களைப் பெற்றிருப்பது சிறப்பாகும். சங்க இலக்கியம், இலக்கணம், மொழியியல் ஆகிய துறைகளில் புலமை பெற்றவர். தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கோயம்புத்தூர் மகாகவி பாரதி அறக்கட்டளை வழங்கிய ‘மகாகவி பாரதி சிறந்த நூல் விருது’, திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய ‘செந்தமிழ்க் கலாநிதி’ விருது ஆகியவற்றைப் பெற்றிருப்பது சிறப்பாகும். முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு, தேசியக் கருத்தரங்குகளில் செவ்விலக்கிய ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளமை சிறப்புக்குரியதாகும். தொல்காப்பியக் கலைச்சொற் களஞ்சியம் – (எழுத்ததிகாரம்), ‘சங்க இலக்கியம்ஓர் எளிய அறிமுகம், சொல்லிலக்கணமும் சமூக உறவுகளும்’ என்னும் நூல்களும் இவரது செவ்விலக்கியக் கட்டுரைகளும் இலக்கண இலக்கிய ஆய்வாளர்களின் ஆய்வுத் தேடலுக்கு வழிகாட்டியாகச் சிறப்புப் பெற்றிருப்பது பாராட்டுதற்குரியதாகும்.

 
முனைவர் கலை. செழியன்

 முனைவர் கலை. செழியன் 1983இல் சென்னையில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் கூடுதல் கல்வியாக இளநிலைச் சட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை உளவியல், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓக (யோகா) ஆசிரியப் பயிற்சிப் பட்டயப் படிப்பு ஆகியவற்றையும் பெற்றிருப்பது சிறப்பாகும். தொல்காப்பியம், திருக்குறள் ஆகியவற்றில் கவனகக்கலை வல்லமை பெற்றவர். செம்மொழித் தமிழைப் பரப்பும் வகையில் தொல்காப்பியத் தொடர் சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். சேலம், சிரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். ஆறு நூல்களையும், பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழக அரசின் குறள்பீடப் பாராட்டிதழ்ப் பரிசு, சென்னை, உலகத் திருக்குறள் மையம் வழங்கிய திருக்குறள் தொண்டன் விருது, திருவள்ளுவர் இலக்கிய மன்றம் வழங்கிய கவனகச் சுடர் விருது , சென்னை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் வழங்கிய தமிழ் இளவல் விருது, சென்னைத் தேனீ இலக்கியக் கழகம் வழங்கிய வள்ளுவர் விருது, உலகத் தமிழ்க் கழகம் வழங்கிய நினைவாற்றல் விருது, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு வழங்கிய பெட்னா விருது, அமெரிக்கா தென்கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்கிய பாராட்டுச் சான்றிதழ், அமெரிக்கா நியூ செர்சி தமிழ்ச் சங்கம் வழங்கிய சிறப்பு விருது எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருப்பது சிறப்பிற்குரியதாகும்.
   தொல்காப்பிய உரை, திருக்குறளில் தொழில், குறுந்தொகை இன்பம், செவ்விலக்கிய அறிமுகம் என்னும் நூல்கள் செம்மொழித் தமிழின் சிறப்புகளை எடுத்தியம்புகின்றன.
 தாய்லாந்து, மலேசியா, இலங்கை, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று தமிழ்மொழி குறித்தும், திருக்குறள் குறித்தும் பல்வேறு தலைப்புகளில் ஆங்கிலத்தில் உரையாற்றியமையும், செம்மொழித் தமிழைக் கவனகக் கலையின் மூலம் உலகெங்கும் எடுத்துரைத்தமையும் பாராட்டுதலுக்குரிய இவரது அரிய பணிகளாகும்.

 

முனைவர் சோ. இராசலட்சுமி
  முனைவர் சோ. இராசலட்சுமி 1982இல் விழுப்புரம் மாவட்டம், சக்காம் பேட்டை எனும் ஊரில் பிறந்தவர். இலக்கியம், மொழியியல், சுவடியியல், நாட்டுப்புறவியல் ஆகிய துறைகளில் புலமை பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். சுவடியியல்-பதிப்பியல், நாட்டுப்புறவியல், புலவர் பயிற்சிப் பட்டயச் சான்றுகள் பெற்றிருப்பது சிறப்பாகும். இவர் நா. வானமாமலை நினைவு விருதினையும் பெற்றுள்ளார்.  மொழியியல் நோக்கில் சங்க இலக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இலக்கிய இதழ்களான செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப் பொழில் ஆகியவற்றில் வெளியான செவ்விலக்கியக் கட்டுரைகளைத் தொகுத்து ஆராய்ந்து வருகிறார். தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மேலாய்வு செய்து வருகிறார். மூன்று நூல்கள் எழுதியுள்ளார். விக்டோரியா மகாராணி அம்மானைஆய்வு, நாடி நிதானம்பதிப்பும் ஆய்வும், தமிழில் மொழியியல் ஆய்வு வரலாறுஇதழ்கள், தேடலின் தடங்கள் என்னும் நூல்கள் ஆய்வுத் தேடலுக்குப் பயனுள்ளவையாக அமைந்துள்ளன. ஆற்றுப்படைகள்: பெண் குறித்த பதிவுகள், கபிலரின் கள் அறம்ஓர் விவாதம், மொழியியல் கோட்பாட்டாய்வுகள்விளக்கமும் புரிதல்களும் என்னும் ஆய்வுக் கட்டுரைகள் சங்க இலக்கிய ஆய்வுக்கு அரிய பங்களிப்புகளாகும்.

  
முனைவர் . மகாலெட்சுமி

முனைவர் . மகாலெட்சுமி 1977இல் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனக் கலைக் கல்லூரியில் இலக்கிய இளங்கலை(பி.லிட்.), தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியலில் பட்டம் பெற்றிருப்பது சிறப்பாகும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் முனைவர் பட்ட மேலாய்வு செய்துள்ளார். இலக்கியம், அகராதியியல் துறைகளில் புலமை பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பெருஞ்சொல்லகராதித் துறையில் திட்டத் தகைமையாளராக ஓராண்டு பணிபுரிந்துள்ளார். கும்பகோணம், அன்னை கலை-அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தற்போது சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்கலைக்கழக நல்கைக் குழு நிதியுதவியுடன் முனைவர் பட்ட மேலாய்வு மேற்கொண்டு வருகிறார். திருவையாறு, தமிழ் ஐயா கல்விக்கழகம் வழங்கிய செந்தமிழ்ப்பாரதி, செந்தமிழ்ச்சுடர், இலக்கியச் சுடர் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகளில் செவ்விலக்கியக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். இரண்டு நூல்கள் எழுதியுள்ளார். அறிவியல் பார்வையில் முல்லைத்திணைப் பாடல்கள் என்னும் நூலும், சங்க இலக்கியத்தில் மழை மேகங்கள், சிலம்பில் உறந்தை அல்லது உறையூர், தொல்காப்பியத்தில் கருத்துப் புலப்பாட்டு உத்திகள், முல்லைத்திணை ஆய்ச்சியர் தொழில்கள், தொல்காப்பியரின் சொற்பாகுபாட்டில் பெயர்ச்சொல், நானாற்பதில் வாழ்வியல் விழுமியங்கள் ஆகிய செவ்விலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், சங்க இலக்கிய ஆய்வுக்கு இவரது பங்களிப்புகள் ஆகும்.
 
முனைவர் சௌ.பா. சாலாவாணிசிரீ

  முனைவர் சௌ.பா. சாலாவாணிசிரீ 1977இல் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். சென்னை, இராணிமேரி கல்லூரியில் முதுகலைப் பட்டமும், அன்னை தெரசா மகளிர் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், சென்னை, எத்திராசு மகளிர் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு, சுற்றுலா மேலாண்மைப் பட்டயங்கள் பெற்றிருப்பது சிறப்பாகும். சங்க இலக்கியம், கட்டடக்கலைத் துறைகளில் புலமை பெற்றவர். அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் உதவிப் பேராசிரியராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தற்போது சென்னை, சிரீகிருட்டிணசாமி மகளிர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகத்தின் தமிழ்ச்சுடர், செந்தமிழ்த்திலகம், இலக்கியச்சுடர், தெய்வத் தமிழ்ச்சுடர்  ஆகிய விருதுகளையும், கவிராசன் தமிழ் மன்றத்தின் முத்தமிழ்ப் பாரதி விருதினையும், இலயோலா கல்லூரியின் இலக்கிய ஊடக விருதினையும் பெற்றுள்ளார். அறுபதுக்கும் மேற்பட்ட  பன்னாட்டு, தேசியக் கருத்தரங்குகளில் கட்டுரைகள் வழங்கியுள்ளார். ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சங்க இலக்கியம் சார்ந்த ஆய்வுக் கட்டுரையினை வழங்கியமை இவரது சாதனையாகும். நான்கு நூல்கள் எழுதியுள்ளார்.  திருவள்ளூர் வட்டச் சிவன் கோயில்கள் என்னும் நூலும், ஆற்றுப்படை இலக்கியங்களில் இசைக் கலைஞர்கள், இன்னா செய்யாமை, திருக்குறளில் உம் உளம் அளந்த ஓர் அடி,  மெய்ப்பாடும் உளவியலும் முதலிய செவ்விலக்கியக் கட்டுரைகளும் சங்க இலக்கிய ஆய்வுக்கு இவரது பங்களிப்புகள் ஆகும்.