Monday, September 03, 2012

இலக்குவனார் -மயிலாடன், விடுதலை

  விடுதலை : திங்கள், 03 செப்டம்பர் 2012 15:52
தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் வாய்மேடு எனும் கிராமத்தில் சிங்காரவேலருக்கும் இரத் தினம் அம்மையாருக்கும் பிறந்த (17.11.1910) இலட்சு மணன் தான் பிற்காலத்தில் செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் என்ற ஏற்றம் பெற்ற பெருமகன்.
தந்தை பெரியார் அவர் களின் படை வரிசையில் ஆற்றல் மிகுந்த தளபதி. அவர்தம் நினைவு நாள் இந்நாள் (3.9.1973).
திருவையாறு தமிழ்க் கல்லூரியில் படித்த இவர் தொல்காப்பியத்தையே ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கும் அளவுக்கு ஆங்கிலப் புலமை  மிக்கவர். முனைவர் பட்டமும் பெற்றவர்! (அதனுடைய எச்சம்தான்  அவரின் மகன் பேராசிரியர் மறைமலை இலக்குவன் போலும்!)
இலக்குவனார் அவர் களால் ஆங்கில மொழி யாக்கம் செய்யப்பட்ட தொல்காப்பியத்தைத் தான் முதல் அமைச்சர் அண்ணா மேற்கொண்ட தம் வெளி நாட்டுப் பயணத்தின்போது யேல் பல்கலைக் கழகத்திற் கும் அளித்தார். வாடிகன் போப்புக்கும் கொடுத்தார்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது தான் தமிழ்க் காப்புக் கழகத்தினைத் தொடங்கி னார் (6.8.1962) தமிழ்க் காப்புக் கழகத்தின் கொள்கை என்ன தெரியுமா? புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் தமிழியக்கம் கூறும் குறிக்கோள்களே.
இது ஒன்று போதாதா இலக்குவனாரின் வீரஞ் செறிந்த இனமானம், மொழி மானம் மேம்பட்ட பகுத்தறிவு உள்ளத்திற்கு?
சமயமெனும் சூளையில் தமிழ் நட்டால் முளையாது! -என்ற அடிநாதம் தானே தமிழியக்கம்.?
முதல் அமைச்சர் பக்தவத்சலம் ஆட்சியில் இலக்கு வனார் மீது தொடுத்த வழக் குகள் ஒன்றா - இரண்டா? 14 வழக்குகள். அனைத்தை யும் நெஞ்சு நிமிர்வோடு சந்தித்தார்.
இலக்குவனார் தமிழ்ப் பற்றாளர், உள்ளம் கவர்ந்த வர். இதழ் நடத்துபவர், அவர் வெளியே இருந்தால் அரசுக்கும்  அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு இராது என்றார் அரசு வழக்குரைஞர்.
எந்த அடிப்படையில் இம்முடிவு என்று எதிர் வினா தொடுக்கப்பட்டது அரசு வழக்கறிஞர் எனக்குள்ள தெளிவால் கூறுகிறேன் என்றார். இதற்கு இலக்குவனார் தரப்பில் பதிலடி என்ன தெரியுமா?
அப்படியானால் என் தெளிவால் கூறுகிறேன். இம்மாநிலத்திற்குக் கேடு முதல்வர் பக்தவத்சலனாரால் ஏற்படுகிறது. அவரை வெளியே விடாமல் சிறைப்படுத்தினால் கேடெல்லாம் ஒழிந்துவிடும் என்கிறேன்.
ஒப்புக் கொள்வீர்களா? நீதி மன்றம் ஒப்பிச் சிறைப்படுத்த ஆணை தருமா? என்பது தான் அந்தப் பதிலடி.
இந்தத் துணிவு எத்தனைப் பேருக்கு வரும்?
இனமானம், மொழிமானம் இரண்டையும் இரு விழி எனக் கொண்ட அந்த வீரத் திருமகனை நினைவு கூர்வ தோடு அந்த   உரத்தையும் பெறட்டும் தமிழினம்!
- மயிலாடன்




Friday, August 31, 2012

பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி

பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி

பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி


                                                    குமரித்தமிழ் வானம்
தமிழ்ப்பேரறிஞர்
பேராசிரியர் சி.இலக்குவனார்
நினைவுச் சொற்பொழிவு
நாள்:  ஆவணி 6, 2043   * ஆக 22, 2012 * புதன் கிழமை மாலை 6.30 மணி
இடம்:  தமிழ்வானம் அரங்கம்,  50/22,கணபதிநகர்,செட்டிக்குளம் சந்திப்பு, நாகர்கோயில் 629 002
வாழ்த்துரை
-       இலக்குவனார் திருவள்ளுவன்
பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி
குமரித் தமிழ் வானம் திங்கள் தோறும் அறிஞர்கள் நினைவாகத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தி வருவது பாராட்டிற்குரியது. இவ்வமைப்பின் இயக்குநர் திரு சுரேசு ஆற்றும் அரும்பணியால் ஆன்றோர்கள் பற்றி அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வாய்ப்பாகிறது. வானம் உள்ளளவும் தமிழ் வானத்தின் பணியும் தொடரட்டும்!
தமிழ்வானத்தின் திங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சியில் இத்திங்கள்  தமிழ்ப்பேரறிஞர் சி.இலக்குவனார் நினைவுச் சொற்பொழிவு அமைந்துள்ளது அறிந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ் உணர்வாளர் கவிஞர் நா.முத்திலவேனார் தலைமையில் குறள்நெறி ஆய்வறிஞரும் இதழாளரும் ஆன முனைவர் சிவ.பத்மநாபன் அவர்கள் பேராசிரியரின் திருஉருவப்படத்தைத் திறந்து வைப்பது பொருத்தமானதே!
தண்டமிழ்த் தொண்டர் தமிழ்வானம் செ.சுரேசு அவர்கள் தொடக்கவுரை யாற்ற, தமிழ்த்தேசியப்பேரவையாளர் ந.மணிமாறன் அவர்கள் இலக்குவனாரின் தமிழ்க்காப்புப் பணி என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவது பேராசிரியரின் தமிழ்ப்பணியை நினைவுகூரவும் அவர் வழி நாம் நடைபோடவும் பெரிதும் உதவியாக அமையும் என்பதில் ஐயமிலலை.
இந்நிகழ்வில் என் வாழ்த்துரையும் இடம பெறச் செய்தமைக்கு முதலிலேயே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் மொழிக்காகச் சிறை சென்ற ஒரே பேராசிரியர் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள்மட்டும்தான். தமிழர் தளபதி எனத் தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட பேராசிரியர் அவர்களைத் தமிழ்ப்பகைஅரசின் காவல்துறை இந்திஎதிர்ப்புத் தளபதி எனக் குற்றம் சுமத்தி இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்ச் சிறையில் அடைத்ததில் வியப்பொன்றும் இல்லை. அத்தகைய பெருமைக்கும் போற்றுதலுக்கும்  உரிய பேராசிரியச் செம்மலுக்கு விழா எடுப்பவர்களைப் பாராட்டுகின்றேன்.
இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியரான பேராசிரியர் அவர்கள், தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் அறிஞரல்லாத மக்களுக்கு அறிமுகப்படுத்தியதால்தான் இன்றைக்கும் அவை வாழ்கின்றன. வாழ்வியல் அறிவியல் நூலான தொல்காப்பியத்தை உலக மக்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் பேராசிரியர். அபபணியின் பெரும்பகுதி நடைபெற்றது இம்மாவட்டத்தில் அப்பெருந்தகை பணியாற்றிய பொழுதுதான்.
தமிழ்மொழியின் தொன்மைச் சிறப்பையும் உயர்தனிச் செம்மொழியாகத் திகழும் சீர்மையையும் அயலவர் அறிய ஆங்கிலத்தில் தமிழ்மொழி குறித்து < Semantemes and Morphemes in Tamil Language, Tamil Language- Introduction, Tamil Language – Phonetics,Tamil Language, Tamil Language – Semantics,Tamil Language Syntax ஆகிய > நூல்கள் எழுதி வெளியிட்டு அருந் தொண்டாற்றியதும் இம்மண்ணில்தான்.
குமரிமண்ணிலுள்ள தெ.தி.இந்துக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்த பொழுதுதான் அணிவணக்கத்தைத் திருவள்ளுவர் படத்திற்கு வழங்கச் செய்து உலகப்பெரும்புலவரைப் போற்றினார் பேராசிரியர். இதுவரை யாரும் நிகழ்த்தியிராத அளவிற்குத் திருவள்ளுவருக்கு – மாபெரும் ஊர்வலத்துடனும் கலை நிகழ்ச்சிகளுடனும் மாணாக்கர்கள், இளைஞர்கள், அறிஞர்கள், தமிழன்பர்கள், பொதுமக்கள் சூழத் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவப்படத்தை யானைமீது வைத்து – மிகச்சிறப்பான விழா எடுத்ததும் இம்மண்ணில்தான்!
தனியார்கல்லூரி ஆசிரியர்கள் நிலைமை இன்றைக்கும் மோசமாகத்தான் இருக்கின்றது. வீரர்களை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள் அடிமைப்பட்டுக் கிடப்பது தனியார் கல்லூரிகளில்தான். அவர்களின் உரிமைக்காகப் பலவழிகளிலும் போராடிப் பெரும்பாலான உரிமைகளை மீட்டுத்தந்தவர் பேராசிரியர். இங்குதான் நேர்மைக்கு இடமில்லை எனச் சாதிப் போர்வையில் பேராசிரியர் விரட்டி யடிக்கப்பட்டார். விரட்டியடித்த கல்லூரியினரேபேராசிரியர் பணிக்காலம்தான் கல்லூரியின் பொற்காலம் எனக் கூறி அவரை மீண்டும் முதல்வராகப் பணியமர்த்தியதும் இம்மண்ணில்தான்.
சாதிவெறியினரால் 1952 இல் விருதுநகரில் இருந்து  துரத்தப்பட்டார்   மன்பதை காக்கும் தமிழ்ப் போ்ராளிபேராசிரியர் சி.இலக்குவனார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் காமராசை எதிர்த்து நின்ற அறிவியல் அறிஞர் சி.டி.நாயுடு எனப்பெறும் கோ.துரைசாமி அவர்களின் வெற்றிக்காகப் பாடுபட்டார் பேராசிரியர். இதனால் நாடார் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு நாடாரை எதிர்ப்பதா என்று விரட்டப்பட்டபொழுது தலைவரும் அமைதி காத்தார். அத்தேர்தலில் பேராசிரியர் அவர்கள் தலைவர் காமராசரை எதிர்த்துத் தவறாக ஒன்றும் பேசவில்லை. அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக நாட்டிற்குத்  தொணடாற்ற வேண்டும் என்றும் அறிவியல் அறிஞர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம்  நம் நாடு அறிவியல் உலகில்  பல புதுமைகளைக் காண வேண்டும் என்றும் பேசினார்.
தாம் நடுநிலையாளர் என்பதை உலகிற்கு உணர்த்த  கருமவீரர் காமராசர் எனப் பேராசிரியர் நூல் எழுதி வெளியிட்டதும் இம்மண்ணில்தான். பேராசிரியர் கருதியவாறே முதல்வரான பெருந்தலைவர் பேராசிரியரின் தமிழ்ச்சார்பினையும் தன்னலம் கருதாத்  தொண்டுகளையும் புரிந்து கொண்டு அவரைச் சிறப்பு செய்யஎண்ணியதும் இம் மண்ணில் பேராசிரியர் இருந்தபொழுதுதான். பொதுக்கூட்டம் ஒன்றில் தலையில் துண்டு கட்டிக் கொண்டு பார்வையாளராக அமர்ந்திருந்த பேராசிரியரை அடையாளம் கண்டு கொண்டு அருகில் வந்து நலம் உசாவிப் பெருந்தலைவர் காமராசர் எளிமையில் உயர்ந்தவராகத் தம்மை உலகிற்கு  உணர்த்திய நிகழ்வு நடந்ததும் இம்மண்ணிலதான. பேராசிரியர் தமிழ்நாட்டின் தலைநகரில்தான் பணியாற்ற வேண்டும்; அவரது தொண்டு சுருங்காமல் விரிய வேண்டும் என அப்போது முதல்வராக இருந்த பெருந்தலைவர் தலைநகருக்கு அழைத்ததும் இம்மண்ணில்தான்.
இன்றைக்கு அரசால்  ஏற்கப்பபெற்று தமிழ்த்தாய் வாழ்த்தாக மனோண்மணியம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடல் பாடப்படுவதை அனைவரும் அறிவர். பேராசிரியர் அவர்கள், இப்பாடலை முதலில் தமிழ்வாழ்த்தாக மேடைநிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடச் செய்து அறிமுகப்படுத்தியதும் இதே மண்ணில்தான்.
தமிழ் உரிமைப் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின்  போர்க்குணங்களையும் தமிழுக்குக் கேடயமாக விளங்கிக் காத்த உரிமைப் போராட்டங்களையும் நாம் நினைவுபடுத்திக் கொள்வது அப்போர்க்குணம் அழியாமல் நம்மிடம் பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். கல்வி, ஆட்சி, கலை, வழிபாடு என எல்லா நிலைகளிலும் தமிழே இருக்கப் போராடியவர் பேராசிரியர் அவர்கள். தமிழின் பேரால் போராட்டங்கள் நடத்தி ஆட்சியில் அமர்ந்தவர்களே  நேற்றைக்கும் இன்றைக்கும் எனத்  தமிழ்ப்பகைச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.  தமிழ்ப்பகையை எதிர் கொண்டவர்களே இன்றைக்குத் தமிழ்ப்பகைக்கு நட்பாகப் போனதால் தமிழன்பர்கள் கையறு நிலையில் இருக்கின்றனர். இந்நிலையை மாற்றித் தமிழுக்கு அன்பரெனில் நமக்கும் அன்பரே! தமிழுக்குப் பகை எனில் நமக்கும் பகைவரே! என நாம் உறுதியுடன் தமிழ்க்காப்புப் போரில் ஈடுபட  அவரது நினைவு நமக்குத் துணை நிற்கட்டும்!
தம்வாழ்வையே தமிழ்நலம்  நாடிய பேராட்டக்களமாக அமைத்துக் கொண்டவர் பேராசிரியர்.   அவர் வழியில் வாழ அவரது குறிக்கோளை  நினைவு கொள்வோம்!
அவரது  குறிக்கோளின்படி . . . . மொழிகளின் சமஉரிமையை நிலைநாட்டவும் தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை, தமிழில்தான் எல்லாம் என்ற நிலையை விரைவில் உண்டாக்கவும், தமிழர் பங்கு பெற உரிமையுள்ள இடங்களில் எல்லாம் தமிழும் இடம் பெறவும் காலத்துக்கேற்ப மரபு கெடாது, தமிழை எல்லா வகையாலும் வளப்படுத்தவும், ஒல்லும் வகையால் அயராது உழைப்பதே இனி நம் வாழ்நாட்பணி எனக் கொள்வோம்.
இலக்குவனார் வழி நின்று இன்தமி்ழ் காப்போம்!
 

Monday, March 26, 2012

செந்தமிழ்க் காவலர் அறிஞர் சாமி.சிதம்பரனார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 26/03/2012


100. சீர்திருத்தச் செம்மல் செந்தமிழ்க் காவலர் அறிஞர் சாமி.சிதம்பரனார் (1900-1961).

100. அவர் சொன்னார் இவர் சொன்னார் என ஏற்பது இகழ்ச்சி; எவர் சொன்னாலும் என்ன சொன்னார்? எதற்காகச் சொன்னார்!’ என்பதை ஆய்ந்து ஏற்பதே வளர்ச்சி என்றார் இப்பேரறிவாளர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, March 25, 2012

பெரும்புலவர் மயிலை சீனி வேங்கடசாமி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 25/03/2012

99. ஆராய்ச்சிப் பேரறிஞர் அதிநுட்பப் பெரும்புலவர் மயிலை சீனி வேங்கடசாமி (1900-1980).

99. “மறைந்து போன தமிழ் நூல்கள்” என மகுடமிட்டு ஓர் அரிய திருநூலைப் படைத்த இப்பேரறிஞர் “களப்பிரர் காலத் தமிழகம்” என்னும் ஆய்வு நூல் வெளியிட்டுப் பெருமை பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Monday, March 19, 2012

அருந்தமிழ்க் களஞ்சியம் அறிஞர் கீ.இராமலிங்கனார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 19/03/2012


98. ஆட்சிமொழி அருங்கலம் அருந்தமிழ்க் களஞ்சியம் அறிஞர் கீ.இராமலிங்கனார் (1899-1986).

98. ஆட்சிமொழியாகத் தமிழ் அரியணை ஏறுமென்ற நம்பிக்கைகளில் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து, அதனை நடைமுறைப்படுத்த செயற்கரிய பணிசெய்தவர் இப்பெரியார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, March 06, 2012

தித்திப்புப் புதினப்பேரூற்று எழுதுகோல் மன்னர் பேராசிரியர் கல்கி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 02/03/2012


97. தேசியத் தமிழ்க் கொண்டல் தித்திப்புப் புதினப்பேரூற்று எழுதுகோல் மன்னர் பேராசிரியர் கல்கி (1899-1954).

97. தமிழின் வரலாற்று நெடுங்கதைப் பிதாமகர் உரைநடைக்கு நலமும், வளமும் ஊட்டிய உரைநடைச் சித்தர் தமிழின் செழுமைக்குப் பன்முகப் பணியாற்றிய தமிழச் செல்வர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, March 01, 2012

தத்துவநூல் ஞானமணி தவசீலர் சுவாமி சித்பவானந்தர் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 01/03/2012

96. தபோவனத்துத் தமிழ்ஞானி தத்துவநூல் ஞானமணி தவசீலர் சுவாமி சித்பவானந்தர் (1898-1985).

96. இப்பேரருளாளரின் நூல்கள் அனைத்தும் இறைவனது திருவடிப் பேற்றை அடைவதற்கு வழி காட்டுபவை. அதனையே நோக்கமாக்கி நிலை நாட்டுபவை அவை தமிழின் அருட் சொத்துகள்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0
 



Wednesday, February 29, 2012


 தமிழ்க் கடல் இராய.சொக்கலிங்கனார் ~

 அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 29/02/2012


95. தமிழ்ப் பேரறிஞர் தமிழ்க் கடல் இராய.சொக்கலிங்கனார் (1898-1974).

95. இப்பேரறிஞரின் வியக்கத்தக்க நினைவாற்றல் நெஞ்சகத்தே ஒரு தமிழ் அணைக்கட்டையே அமைத்திருந்தது. இப்பெருமானின் ‘காந்தி கதை’ தமிழ் மொழியில் காந்தி பற்றி உருவாக்கம் கொண்ட முதற் காவியம்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
 




Tuesday, February 28, 2012

புலவர் இ.மு.சுப்பிரமணியம் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 28/02/2012
94. செய்தித் தமிழ்மாலை சிந்தனை நற்பேழை புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை (1896-1975).

94. இரண்டாயிரத்து நூற்று ஐந்து அடிகளைக் கொண்ட “இராமாயண அகவல்” படைத்த இப்பேரறிஞர் பள்ளிப் பிள்ளைகளுக்கென எழுதிக் குவித்த பாட நூல்கள் பலப்பல.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0




 

Monday, February 27, 2012

செந்தமிழ்க் களஞ்சியம் மகாவித்துவான் மே. வீ.வேணுகோபால் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 27/02/2012


93. சிந்தாமணிப் பெட்டகம் செந்தமிழ்க் களஞ்சியம் மகாவித்துவான் மே. வீ.வேணுகோபால் பிள்ளை (1896-1985).

93. நான்கு பகுதிகளாக உருவாக்கம் கொண்ட ‘கம்பராமாயண உரைநடை’ ‘தமிழ் அன்றும்- இன்றும்’ ஆகிய இப்பெருமகனாரின் திருநூல்கள், தமிழின் அரிய செல்வங்கள்; தமிழரின் இலக்கியப் பேழைகள்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0




Sunday, February 26, 2012

சொல்லின் செல்வர் அறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளை ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 25/02/2012

92. செந்தமிழ் நிறைநிலா சொல்லின் செல்வர் அறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளை (1896-1961).

92. தமிழ் மொழியில் திறனாய்வு நூல்கள் வெளியிடப்படாத குறையைத் தமது ஆய்வு நூல்களால் அகற்றிய இப்பேரறிஞர், இனிய குரல் வளத்தோடு ஆற்றிய அறிவார்ந்த உரைப் பொழிவுகள் உயர்வு பெற்றவை.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

எழுச்சிகொண்ட தமிழ் மறவர் ஏந்தல் மங்கலங்கிழார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 24/02/2012

91. இமைப்போதும் தமிழ் மறவா , எழுச்சிகொண்ட தமிழ் மறவர் ஏந்தல் மங்கலங்கிழார் (1895-1953).

91. தமிழுணர்வையும், தமிழ்க் கல்வியையும் ஊரெங்கும் பரப்பும் உயர் நோக்கில் தமிழ்ச் சங்கம் அமைத்து நாடு போற்றும் நற்றமிழ்த் தொண்டாற்றிய இப்பெருந்தகை.  வாழ்ந்த காலம் முழுமையும் தமிழை வாழ வைக்கவே  தமிழ்ச் சங்கம் பயன்பட்டது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

0

Thursday, February 23, 2012

நூலாசிரியர் வெ.சாமிநாதர் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 23/02/2012

90. விழுமிய சிந்தனையாளர் வித்தக நூலாசிரியர் வெ.சாமிநாத சர்மா
(1895-1978).


90. தமிழறிந்த அனைவரும் உலகமறிந்த ஞானச் செறிவு பெற வேண்டுமென ஆசை கொண்ட இப்பேரறிஞர் தேசாபிமானத்தைத் தழைக்கச் செய்து, உலகாபிமானத்தைக் கிளைக்க செய்யும் நூல்களை எழுதினார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Wednesday, February 22, 2012

பன்னூல் ஆசிரியர் பண்டிதர் அருணகிரிநாதர் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 22/02/2012

89. பைந்தமிழ்க் காவலர் பன்னூல் ஆசிரியர் பண்டிதர் அருணகிரிநாதர் (1895-1974).

89. தமிழாசிரியராகப் பணியாற்றி, புதின ஆசிரியராகப் புகழ்பெற்று, பத்திரிகை ஆசிரியராகவும் மேடைப் பேச்சாளராகவும் விளங்கித் தமிழ் காவலராகத் திகழ்ந்தார் இப்பேராசான்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Tuesday, February 21, 2012

தமிழ்நூல் பதிப்பாளர் தவத்திருசிவஞான பாலைய அடிகளார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 21/02/2012

88. தமிழ்க் கல்லூரி நிறுவனர் தமிழ்நூல் பதிப்பாளர் தவத்திருசிவஞான பாலைய அடிகளார் (1894-1965).

88. பல்லாயிரக் கணக்கான தமிழ்ப் புலவர்களை உருவாக்கியுள்ள மயிலம் தமிழ்க் கல்லூரி யைத் தமிழ் நாட்டில் தோன்றிய ‘முதல் கல்லூரி’யாக உருவாக்கம் கொள்ளச் செய்தவர் இப்பேரருளாளர்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0



Monday, February 20, 2012

தமிழறிஞர் பூதலப்பட்டு சிரீராமுலு ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 20/02/2012

87. புதியநலம் வழங்கிய போற்றற்குரிய தமிழறிஞர் பூதலப்பட்டு சிரீராமுலுரெட்டி (1892-1971).

87. திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களைத் தெலுங்கு மொழியில் கண்டு கொள்ள வைத்த இப்பேரறிவாளர் பாரதி பாடல்களையும் தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0



Saturday, February 18, 2012

வளர்தமிழ் நூலாசிரியர் பேராசான் சதாசிவப் பண்டாரத்தார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 18/02/2012


86. வரலாற்றுப் பேராசிரியர் வளர்தமிழ் நூலாசிரியர் பேராசான் சதாசிவப் பண்டாரத்தார் (1892-1960).
86. தமிழ்நாட்டு வரலாற்றைத் தமிழர் தமிழ் மொழியில் வழியே அறிந்து கொள்ள வழிகாட்டிய முன்னோடியாகத் திகழ்ந்த இப்பேராய்வாளர் உருவாக்கிய வரலாற்று நூல்கள் வரலாறு படைத்தவை.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0


Friday, February 17, 2012

அறிஞர் ந.சி.கந்தையா ~ அhttp://www.natpu.in/?p=20126றிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 17/02/2012

85. உரைநடைச் செல்வர் உணர்வூட்டிய தமிழர் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை (1893-1967).

85. பத்துப்பாட்டு, அகநானூறு, பதிற்றுப்பத்து, கலிங்கத்துப்பரணி, பரிபாடல், கலித்தொகை முதலிய சங்க நூல்கள் பலவற்றை உரை நடையில் வழங்கிய இப்பேராசிரியர் இலங்கைத் தமிழறிஞராவார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Thursday, February 16, 2012

திருக்கோயில் செம்மல் திரிசிரபுரம் இரா.பஞ்சநதம் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 16/02/2012


84. தென்தமிழ்ச் செல்வர் திருக்கோயில் செம்மல் திரிசிரபுரம் இரா.பஞ்சநதம் பிள்ளை (1893-1968).

84. தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் பற்றிய முறையான வரலாறுகளை முதன்முதலில் எழுத வழங்கிய இப்பெருமகனார் திருச்சியில் ‘தமிழ் ஆராய்ச்சிக் கழகம்’ என்றோர் அமைப்பை உருவாக்கம் கொள்ளச் செய்தார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Tuesday, February 14, 2012

இலக்கியத் திருவிளக்கு பேராசிரியர் வேங்டராசுலு ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 14/02/2012

83. இலக்கணப் பெருங்கடல் இலக்கியத் திருவிளக்கு பேராசிரியர் வேங்டராசுலு (1893-1963).

83. இலக்கணத் துறையில் கடல்போன்ற இப்பெருந்தகையின் கருத்துப் பரப்பு. ஆய்ந்து வெளியிட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் போற்றத்தக்க புதிய செய்திகளை நிலை நாட்டியுள்ளது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

சீர்திருத்தக் காவலர் அறிஞர் சொ.முருகப்பா ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 13/02/2012


82. செந்தமிழ்ச் செம்மல் சீர்திருத்தக் காவலர் அறிஞர் சொ.முருகப்பா (1893-1956).
82. ‘குமரன்’ என்னும் மாத இதழை 1923-ஆம் ஆண்டில் தொடங்கி வெளியிட்ட இப்பெருந்தகை. இதழைத் தமிழின் வளர்ச்சிக்கும், தமிழ் எழுத்தாளர்களின் மலர்ச்சிக்கும் களமாகக் கொண்டார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0



Sunday, February 12, 2012

தமிழ்ப் பேராசான் சுவாமி விபுலாநந்தர் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 11/02/2012

81. இலங்கைத் தமிழாகரர் இசை தமிழ்ப் பேராசான் சுவாமி விபுலாநந்தர் (1892-1949).

81. இசைத்தமிழ் ஞானக் கதிராக ‘யாழ்நூல்’ இயற்றியருளிய இப்பெரியார் மகாகவி பாரதியின் பாடல்களை ஈழ நாட்டில் பற்றிப் பரவிடச் செய்த பாரதி பக்தர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்





Friday, February 10, 2012

தமிழ்நூல் உரையாசான் டாக்டர். ஆர்.கே.சண்முகம் - அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 10/02/2012

80. தமிழிசைத் தளபதி தமிழ்நூல் உரையாசான் டாக்டர். ஆர்.கே.சண்முகம் செட்டியார் (1892-1953).

80.சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிப் பதிப்பித்த இப்பேரறிவாளர். தமிழிசையின் உயிர் நாடியான பண்களைப் பற்றி ஆராய்வதில் பெரு விருப்பம் கொண்டு, பண் ஆராய்ச்சிக் குழுவை உருவாக்கினார்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Thursday, February 09, 2012

பேராசிரியர் மயிலை சிவமுத்து ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 09/02/2012

79. மாணவர் மன்றப் புகழ்ச்செல்வர் மாணிக்கத் தமிழுக்கோர் உயிர்நாடி பேராசிரியர் மயிலை சிவமுத்து (1892-1968).

79. அறுபது ஆண்டுகளுக்கு முன்னமேயே சிறுவருக்காக வெளியிடும் நூல்கள் உருப்பெறுகின்ற உள்ளீட்டையும், உருவ அமைப்பையும் வரையறை செய்த இப்பேராசிரியர், அத்தகைய நிலையில் பல நூல்களை வெளியிட்டார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்






Wednesday, February 08, 2012

அறிஞர் பெ.நா.அப்புசுவாமி ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 08/02/2012


78. அறிவியல் தமிழுக்கோர் ஊற்றுக்கண் அருந்தமிழ் விளைவுக்கொரு நாற்றங்கால் அறிஞர் பெ.நா.அப்புசுவாமி (1891-1986).

78.தமிழின் தொன்மையை உலகறியச் செய்ய வேண்டுமென்பதே பாரதியாரின் ஆசை; அளப்பரிய ஆர்வம்; அந்த ஆசையை, ஆர்வத்தை நிறைவு செய்வதே என் வேலை” என மூச்சுள்ளவரை தமிழ்த் தொண்டாற்றிய மூதறிஞர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Tuesday, February 07, 2012

ஞானச்செல்வர் அறிஞர் பொ.திருகூடசுந்தரம் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 07/02/2012


77. தேசப்பிதாவின் சீரிய புதல்வர் தெய்வத்தமிழின் ஞானச்செல்வர் அறிஞர் பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை (1891-1969).

77. ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பக் கட்டுப்பாடு பற்றிச் சிந்தித்து “விவாகமானவர்க­ளுக்கு ஒரு யோசனை என்னும் அறிவார்ந்த அரிய நூலை வெளியிட்டுப் பெருமைப் பெற்ற பேரறிஞர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Monday, February 06, 2012

புரட்சித்தமிழ் ஞாயிறு பாவேந்தர் பாரதிதாசன் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 06/02/2012
76. புலர்காலைக் கவித்தென்றல் புரட்சித்தமிழ் ஞாயிறு பாவேந்தர் பாரதிதாசன் (1891-1964).
76. இந்திய நாட்டின் முதல் கவிதை இதழை 1935-ஆம் ஆண்டில் தொடங்கி, அந்த இதழுக்கு ‘சிரீசுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்’ எனப் பெயர் சூட்டி மகிழ்ந்த புரட்சிக் கவிஞர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0



Sunday, February 05, 2012

வித்தகத் தமிழ்ச் செல்வர் அறிஞர் வையாபுரி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 05/02/2012

75. வித்தகத் தமிழ்ச் செல்வர் அறிஞர் வையாபுரிப் பிள்ளை (1891-1956).

75. உரையாலும் உணர்த்திய செய்திகளாலும் நூல்களாலும் தமிழின் வரலாற்றில் மிகச் சிறந்த பேரறிவாளராகத் திகழ்ந்த இப்பெரியார். ஆய்வுத் துறையில் முன்னோடி எனப் போற்றப்பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Saturday, February 04, 2012

முத்தமிழ் மாமுனிவர் சுத்தானந்த பாரதியார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 04/02/2012
74. ஆயுள்காப்பியம் அருளிய முத்தமிழ் மாமுனிவர் சுத்தானந்த பாரதியார் (1891-1990).

74. தமிழில் வரலாற்றில் பிரமிக்கத்தக்க பெருந்தொண்டாற்றிய இப்பேரருளாளர் வாழ்ந்தது தொண்ணூற்று மூன்று ஆண்டுகள் வழங்கிய நூல்களோ ஆயிரத்திற்கும் மேற்பட்டவை சாதனைச் சரித்திர நாயகர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்


http://www.natpu.in/?p=20103http://www.natpu.in/?p=20103

Friday, February 03, 2012

வளர்தமிழ் பேரார்வலர் டாக்டர் சுநீர்குமார் சாட்டர்சி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 03/02/2012


73. வங்கத்துத் தமிழறிஞர் வளர்தமிழ் பேரார்வலர் டாக்டர் சுநீர்குமார் சாட்டர்சி (1890-1978).

73. பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வெளியான, ‘பாரத மொழிகளின் இலக்கிய வரலாறு’ என்னும் பெருநூலில் வங்கத் தமிழறிஞரான இப்பேராசிரியர். தமிழர் பற்றிய தனிப் பகுதியை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்




Thursday, February 02, 2012

பைந்தமிழ் இசைச்செல்வர் பாடலாசிரியர் பாபநாசம் சிவன் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 02/02/2012

72. பக்திப் பாவலர் பைந்தமிழ் இசைச்செல்வர் பாடலாசிரியர் பாபநாசம் சிவன் (1890-1973).

72. இசை வாணர்கள் விரும்பிப் பாடும் இசைத்திறம் கொண்டவையென இப்பெருந்தகை இயற்றிய பாடல்கள் தமிழிசைக்கு உரமும், ஊட்டமும் அளித் தனிப் பெருங் கொடைகள்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Wednesday, February 01, 2012

மறுமலர்ச்சி எழுத்தாளர் அறிஞர் வ.இரா. ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 01/02/2012


71. மறுமலர்ச்சி எழுத்தாளர் மாக்கவியின் மாணாக்கர் அறிஞர் வ.(இ)ரா. (1889-1951).

71. மிக மிகப் பழைமையான நம்பிக்கைகளோடு வாழ்ந்த குடும்பத்தில் பிறந்த இப்பெருமான் மிக மிகப் புதுமையான வண்ணங்களோடு வாழத் தொடங்கி, தமது எழுத்தால், தமிழ் மக்களை, ஒரு மறுமலர்ச்சி உலகில் உலா வரச் செய்தார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0


செந்நாப்புலவர் சிறப்புரை வித்தகர் ஆ.கார்மேகக் கோனார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 31/01/2012

70. செந்நாப்புலவர் சிறப்புரை வித்தகர் ஆ.கார்மேகக் கோனார் (1889-1957).

70. “நல்லிசைப் புலவர்கள்” என்னும் ஆராய்ச்சி நன்னூலை உருவாக்கியளித்த இப்பேராசிரியர் சிலப்பதிகாரத்தை உரைநடையில் இனிமையும் எளிமையும் வாய்ந்ததாகப் படைத்து வழங்கினார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

சான்றாண்மைப் பேராசான் பேரறிஞர் கா.சு.பிள்ளை ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 30/01/2012

69. சட்டநூல் வல்லுநர் சான்றாண்மைப் பேராசான் பேரறிஞர் கா.சு.பிள்ளை (1888-1945).

69. இப்பெருமான் உருவாக்கியளித்த ‘இலக்கிய வரலாறு’ வரலாற்று நூல்களுக்கெலலாம் வழிகாட்டியானது பல்கலைப் பேராசானாய்ப் பன்னூல் ஆசிரியராய்த் திகழ்ந்து பெரும் புகழ் பெற்றவர் இப்பெருந்தகை.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Sunday, January 29, 2012

பைந்தமிழ்க் காவலர் கோவைக்கிழார் இராமச்சந்திரன் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 29/01/2012

68. பன்மொழி ஆர்வலர் பைந்தமிழ்க் காவலர் கோவைக்கிழார் இராமச்சந்திரன் செட்டியார் (1888-1969).

68. கல்வெட்டுத் துறையில் திட்பமும், நுட்பமும் பெற்றுத் திகழ்ந்த இப்பேரறிஞர் “சேக்கிழாரும் கல்வெட்டும்” “நால்வர்களும் கல்வெட்டுகளும்” “கல்லும் பேசுகிறது” ஆகிய கல்வெட்டாய்வு நூல்களைப் படைத்துள்ளார்
.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Saturday, January 28, 2012

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 28/01/2012

67. நாட்டுணர்வுக் காவலர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (1888-1972).

67. தெய்வ பக்தியும் தேச பக்தியும் ஊடும் பாவுமாக அமைந்த பாடல்களை வழங்கிக் காந்தியக் கவிஞர் எனப் போற்றப் பெற்ற இக்கவிப்பெருமான் நாவல் திறனாய்வு மொழிபெயர்ப்பு வரலாறு ஆகிய துறைகளிலும் பெருமை பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Friday, January 27, 2012

கரந்தைக் கவியரசு அறிஞர் வேங்கடாசலம் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 27/01/2012

66. கவின்தமிழ்க் காவலர் கரந்தைக் கவியரசு அறிஞர் வேங்கடாசலம் பிள்ளை (1888-1955).

66. “ஆசானாற்றுப்படை” “சிலப்பதிகார நாடகம்” “மணிமேகவை நாடகம்” ஆகிய புகழுக்குரிய நூல்களைப் படைத்தளித்த இப்பெருந்தகை. ‘அகநானூறு’க்கு உரை கண்டுள்ளார்.

                                    தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Thursday, January 26, 2012

சைவப் பாரதியார் அறிஞர் சச்சிதானந்தம் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 26/01/2012


65. சாதனைச் செல்வர் சைவப் பாரதியார் அறிஞர் சச்சிதானந்தம் பிள்ளை (1887-1972).

65. தமிழ் மொழியையும், சைவ சமயத்தையும் பேணி வளர்த்த
சென்னை சைவ சித்தாந்த மகா சமாசத்தின் செயலாளர் பொறுப்பை இருபத்து நான்கு அகவையிலேயே  ஏற்ற இப்பெருமகனார் செய்த சேவையால் ‘சைவப்பாதிரியார்’ என அழைக்கப்பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்



Wednesday, January 25, 2012

பெரும்புலவர் அ.மு.சரவணன் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 25/01/2012

64. பெருஞ்சொல் விளக்கனார் பேராசான் பெரும்புலவர் அ.மு.சரவண முதலியார் (1887-1959).

64. வியக்கத்தக்க வித்தகப் பேரறிவு கொண்டிருந்த இப்பெரும்புலவர் எழுதிய ஆய்வு நூல் “அமுதடி அடைந்த அன்பர்” அறிஞர் பெருமக்களால் போற்றப்பெற்றது. உரையாற்றலால் சைவமும் தமிழும் தழைத்தோங்கச் செய்தப் பெரியார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, January 24, 2012

கவிராயர் செகவீரபாண்டியனார் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 24/01/2012

63. கம்பன்கலை காட்டியவர் திருக்குறள் நெறி ஊட்டியவர் கவிராயர் செகவீரபாண்டியனார் (1886-1971).

63. “திருக்குறட் குமரேச வெண்பா” “கம்பன் கலைநிலை” ஆகிய பெருநூல்கள் வெளியானபோது, இப்பேரறிவாளரின் அறிவாற்றலையும் எழுத்தாற்றலையும் அறிந்து கொண்ட அறிஞர் உலகம் வியந்து போற்றியது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0