Saturday, June 12, 2010

தமிழ் வளர்த்த அறிஞர்கள் ..சி.இலக்குவனார்

தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் இரண்டு கண்களாகவே கருதி அந்நூல்கள் சொன்ன கருத்துப்படியே தம் வாழ்வை அமைத்துக் கொண்ட பேராசிரியர் சி.இலக்குவனார்(1910-1973). இவர் தமிழில் மட்டுமல்லாமல், ஆங்கிலத்திலும் பெரும் புலமை கொண்டவர். இலக்குவனார் தமிழ் வளர்ச்சியின் பொருட்டு 'தமிழ்க் காப்புக் கழகம்' என்னும் ஒரு தமிழ்க் கழகத்தை மதுரையில் துவங்கி தமிழ்ப் பணி ஆற்றினார். இவர் எழிலரசி, மாணவர் ஆற்றுப்படை, துரத்தப்பட்டேன், பழந்தமிழ், வள்ளுவர் கண்ட இல்லறம், அம்மூவனார் போன்ற கவிதை நூல்களையும், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், என் வாழ்க்கைப் போர், கரும வீரர் காமராசர் ஆகிய வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். இலக்குவனார் ஆற்றிய தமிழ்ப் பணியை பாராட்டி, 'முத்தமிழ்க் காவலர்', 'செந்தமிழ் மாமணி', 'பயிற்சி மொழிக்காவலர்', 'இலக்கணச் செம்மல்' போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன.