‘இந்தி எதிர்ப்புப் போராளி’ சி.இலக்குவனார் நினைவு நாள் ஆவணி 18, 2004/ செப். 3, 1973
1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாணவர்
போராட்டத்தில் தமிழாசிரியர்களின்பங்கு முதன்மையானது. மாணவர்களுக்கு
தமிழ்மொழி காக்கும் உணர்வையும் இந்தித்திணிப்பை எதிர்த்திடும்
போர்க்குணத்தையும் கற்றுக் கொடுத்தவர்கள்தமிழாசிரியர்களே!
மதுரை முதல் சென்னை வரை ‘நடைப்பயணம்’ மேற்கொள்ளப்போவதாக அறிவித்த போது காங்கிரசு முதல்வர் பக்தவத்சலமோ குலை நடுக்கம்கொண்டார். உடனே பணி நீக்கம் செய்திடவும் ஆணையிட்டார்.என் அலுவல் போனால்போகட்டும், இந்தியை ஒரு போதும் ஆள விட மாட்டேன்! என்று இலக்குவனார்முழங்கிய போது தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அது முதல் தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதல் தமிழறிஞர் எனும் பெருமை இலக்குவனாருக்குவந்தடைந்தது.
இலக்குவனார் பணிநீக்கம் செய்யப்பட்ட போதிலும் கவலையுறாது தமிழ்த்
தொண்டுபுரிந்து வந்ததைக் கண்டுணர்ந்த அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன்
மீண்டும் பணி வழங்கிடச் செய்தார்
.
திராவிட இயக்கத்தின் அடியொற்றி வளர்ந்த அறிஞர்களுள் ஒருவராக இலக்குவனார்அறியப்பட்ட போதிலும் பெரியாரைப் போல் சிலப்பதிகாரத்தைக் பழித்தவர் அல்லர்; 1951ஆம் ஆண்டு ஆம்பூரில் திராவிடர்கழகத்தின் இலக்கியப் பரப்புரையாளராகஇருந்து கொண்டே சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமைப்படுத்திப் பேசும் இலக்கியம்என்று பேசினார். அதை விடுதலை ஏடு (15.3.1951) ‘சிலப்பதிகாரத்தின் சிறப்பு’ என்று தலைப்பு கொடுத்து வெளியிட்டது.
திராவிட இயக்கத்தின் அடியொற்றி வளர்ந்த அறிஞர்களுள் ஒருவராக இலக்குவனார்அறியப்பட்ட போதிலும் பெரியாரைப் போல் சிலப்பதிகாரத்தைக் பழித்தவர் அல்லர்; 1951ஆம் ஆண்டு ஆம்பூரில் திராவிடர்கழகத்தின் இலக்கியப் பரப்புரையாளராகஇருந்து கொண்டே சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமைப்படுத்திப் பேசும் இலக்கியம்என்று பேசினார். அதை விடுதலை ஏடு (15.3.1951) ‘சிலப்பதிகாரத்தின் சிறப்பு’ என்று தலைப்பு கொடுத்து வெளியிட்டது.
அது போல் திராவிடஇயக்கங்களுக்கே உரிய ஆங்கிலப் பித்தும் கொண்டவரல்லர்;
ஒருமுறை நாவலர்நெடுஞ்செழியன் தமிழ்ப்பயிற்று மொழி குறித்த மாநாட்டில்
ஆங்கிலத்திற்குஆதரவாகப் பேசிடவே, அவர் சினங்கொண்டு “தமிழ்மொழி நாவலரா?
ஆங்கில மொழிக்காவலரா?” என்று அவரிடம் அனைவர் முன்னிலையிலும்நேரிலேயே
கேட்டார்.
.
உண்மையில் இன்றைக்குஆளும் திராவிடக்கட்சிகள் ஆங்கிலத்தின் காவல் தெய்வங்களாகவே மாறி விட்டன.இலக்குவனார் இன்று உயிரோடு இருந்திருந்தால் திராவிடக் கட்சிகளைக் காறிஉமிழ்ந்திருப்பார்! அண்மையில் தொடக்கப்பள்ளிகளில்ஆங்கிலவழிக்கல்வியைச்செயலலிதாஅரசு கொண்டு வந்துள்ளது. இது ஒட்டுமொத்தமாகத் தமிழ்வழிக்கல்வியைச் சாகடிக்கும்முயற்சியாகும். ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழிலேயேநடத்தப்படவேண்டும் என்று ஓங்கிக் குரல் எழுப்பிய இலக்குவனார் நினைவு நாளிலேசெயலலிதா அரசின் ஆங்கில வழிக்கல்விக்கு எதிராகப் போராடச் சூளுரைப்போம்!
உண்மையில் இன்றைக்குஆளும் திராவிடக்கட்சிகள் ஆங்கிலத்தின் காவல் தெய்வங்களாகவே மாறி விட்டன.இலக்குவனார் இன்று உயிரோடு இருந்திருந்தால் திராவிடக் கட்சிகளைக் காறிஉமிழ்ந்திருப்பார்! அண்மையில் தொடக்கப்பள்ளிகளில்ஆங்கிலவழிக்கல்வியைச்செயலலிதாஅரசு கொண்டு வந்துள்ளது. இது ஒட்டுமொத்தமாகத் தமிழ்வழிக்கல்வியைச் சாகடிக்கும்முயற்சியாகும். ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழிலேயேநடத்தப்படவேண்டும் என்று ஓங்கிக் குரல் எழுப்பிய இலக்குவனார் நினைவு நாளிலேசெயலலிதா அரசின் ஆங்கில வழிக்கல்விக்கு எதிராகப் போராடச் சூளுரைப்போம்!
No comments:
Post a Comment