மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ.

மறைமலையடிகள்
சுவாமி வேதாசலம் என்கிற பல்லாவரம் உயர்திரு மறைமலையடிகள்
தமிழ்த்தாயின் தவமகன்.
பிறப்பு : 1876இல்
பிறந்த நாள் : சூலை 15
பிறந்த ஊர் :  காடம்பாடி
வட்டம் : நாகப்பட்டினம்
தந்தையார் பெயர் : சொக்கநாதப்பிள்ளை
இளமைப் பெயர் : வேதாசலம்
 படித்த கல்லூரி : நாகை வெசுலி மிசன்
 சைவ ஆசிரியர் :  சோமசுந்தர(நாயக்க)ர்
பொதுத் தொண்டு : 16ஆம் ஆண்டில்
முதல் தோற்றம் : இந்து மதாபிமான சங்கம்
திருமணம் : 17ஆம் ஆண்டில்
 படிப்பு முடிவு : 1894இல்
நட்பு : பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
தமிழாசிரியர் வேலை :  சென்னை கிறித்துவக் கல்லூரி
ஆசிரியராக அமர்ந்தது : 1898இல்
ஞானசாகரம் தொடங்கியது : 1902இல்
சைவ சித்தாந்த சமாசம் தொடங்கியது : 1905 இல்
கல்லூரியை விட்டது – : 1911இல்
அப்போது ஆண்மக்கள் நால்வர்; பெண் மக்கள் மூவர்
துறவு பூண்டது : 1911 ஆகத்து
பல்லாவரம் குடியேறியது : 1916இல்
பொதுநிலைக்கழகம் தோற்றியது : 1917இல்
யாழ்ப்பாணம் சென்றது : 1921இல்
திருவாசகவுரை வெளிவந்தது : 1926இல்
மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் வெளிவந்தது : 1929இல்
புலமை : ஆங்கிலம், தமிழ், வடமொழி
பயிற்சி : மூச்சுப்பயிற்சி, அறிதுயில் பயிற்சி (யோகாப்பியாசம், இப்னா டிசம்) கொள்கை : தமிழே சிவம்
தொண்டு : 60 ஆண்டுகள்
எழுதிய நூல்கள் : 50க்குமேற்பட்டன.
இவை, அவரது வரலாற்றை அறிவிக்கப் போதுமானவை,
(தொடரும்)
கி.ஆ.பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்