Monday, April 05, 2010

இன்று ஏப்ரல் 5 
பெயர் : க. கைலாசபதி ,
பிறந்த தேதி : ஏப்ரல் 5, 1933

இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய
விமர்சகர், திறனாய்வாளர்.ஈழத்துத் தமிழ்
இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு
முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத்
திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு
மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக்
கருதப்படுகின்றது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்று ஏப்ரல் 4
பெயர்:மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை,
பிறந்த தேதி : ஏப்ரல் 4, 1855

மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக
நூலைப் படைத்தவர். மனோன்மணீயத்தில்
இடம்பெற்ற தமிழ்த் தெய்வ வணக்கப்
பாடலான நீராருங்கடலுடுத்த நிலமடந்தைக்
கெழிலொழுகும் என்றபாடல் தமிழ்நாடு அரசினரால் தமிழ்
வணக்கப் பாடலாக ஜூன் 1970 இல் உத்தியோகபூர்வமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்று ஏப்ரல் 2
பெயர் : வ. வே. சுப்பிரமணியம் ,
பிறந்த தேதி : ஏப்ரல் 2, 1881

இந்திய விடுதலைக்காக முதன்மை
பங்காற்றியவரும், சிறந்த இலக்கியவாதியும்,
மொழி பெயர்ப்பாளரும் ஆவார். 1922ல்
சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற
கல்வி நிலையத்தை தொடங்கினார். தமிழ் குருகுலத்தில்
அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில்
நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும்,
உடல் வலிவுப் பயிற்சிகளும் போதித்தார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்று ஏப்ரல் 1
பெயர் : தி.வே.கோபாலையர் ,
மறைந்த தேதி : ஏப்ரல் 1, 2007

பதிப்பாசிரியராக, உரையாசிரியராக,
சொற்பொழிவாளராக, பேராசிரியராக மிளிர்ந்த
தமிழறிஞர். தமிழ்நூற்கடல் என அழைக்கப்
பட்டவர்.தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம்,
ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர். இலக்கணம்,
இலக்கியம், சமயநூல்கள் குறிப்பாக வைணவ
இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க புலமையுடையவர்.

1 comment:

Guruvayurappadhasan B.Sundraraman said...

There are so many Tamil Scholars as A.Sa.Gnanasambandam who wrote " Ravanan Matchiyum Veezhchiyum", Prof R.Radhakrishnan of National College , Prof.Ku Thirumeni who wrote a great book "Raman Thamizhane", and our Solomon Pappiah well known to patti manrams, Tha.ma Vellai Varanam ,Guruvayurappadhasan Sundararaman of Palamarnery who is the very bold writer and crtic and away from Brahmaneeyam also called as "Paappaara Kallar" by his own community of Brahmins, Thi.Ve.Gopalayyar,Kunrakkudi Adigalar, Kudavayil Balasubramaniam etc. We are all being harassed to forget these noble fellows and being insisted to think and to speak and to write about Dr Kalaignar and Dr Kalaignar one and only during the DMK period.Now the slave bond has been uplifted . let us proclaim the glory of all recent and past Tamil Scholars with the voice of peace and benediction